ஆடி கிருத்திகையை ஒட்டி வடபழனி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

மற்ற மாதங்​களில் வரும் கிருத்​திகை நட்​சத்​திரத்தை விட, ஆடி மாதத்​தில் வரும் கிருத்​திகை மிக​வும் விசேஷ​மானது. இந்த ஆண்டு ஆடி மாதத்​தில் ஜூலை 20-ம் தேதி, ஆக. 16-ம் தேதி என 2 முறை கிருத்​திகை நட்​சத்​திரம் வரு​கிறது. 

Jul 21, 2025 - 09:55
 0  3
ஆடி கிருத்திகையை ஒட்டி வடபழனி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

சென்னை: ஆடிக் கிருத்​தி​கையை ஒட்​டி, வடபழனி முரு​கன் கோயி​லில் திரளான பக்​தர்​கள் பால்​குடம், காவடி எடுத்து நேர்த்​திக்​கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்​தனர். மற்ற மாதங்​களில் வரும் கிருத்​திகை நட்​சத்​திரத்தை விட, ஆடி மாதத்​தில் வரும் கிருத்​திகை மிக​வும் விசேஷ​மானது. இந்த ஆண்டு ஆடி மாதத்​தில் ஜூலை 20-ம் தேதி, ஆக. 16-ம் தேதி என 2 முறை கிருத்​திகை நட்சத்​திரம் வரு​கிறது.

அந்த வகையில், முதல் ஆடிக் கிருத்​திகை நாளான நேற்று அனைத்து முரு​கன் கோயில்​களும் விழாக்​கோலம் பூண்​டிருந்​தன. சிறப்பு வழி​பாடு​கள், அபிஷேகம், ஆராதனை​கள் நடை​பெற்​றன. இதனால் அனைத்து முரு​கன் கோயில்​களி​லும் பக்​தர்​கள் கூட்டம் அலைமோ​தி​யது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow