‘அரோகரா’ முழக்கம் விண்ணதிர திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கும்​பாபிஷேகம் நேற்று அதி​காலை 5.30 மணி​யள​வில் கோலாகல​மாக நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள், ‘அரோக​ரா, அரோக​ரா’ என பக்தி முழக்​கமிட்டு தரிசனம் செய்​தனர்.

Jul 15, 2025 - 01:35
 0  4
‘அரோகரா’ முழக்கம் விண்ணதிர திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கும்​பாபிஷேகம் நேற்று அதி​காலை 5.30 மணி​யள​வில் கோலாகல​மாக நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள், ‘அரோக​ரா, அரோக​ரா’ என பக்தி முழக்​கமிட்டு தரிசனம் செய்​தனர்.

முரு​கப்​பெரு​மானின் முதல்​படை வீடான திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில்கும்​பாபிஷேகம் நடத்த முடிவு செய்​யப்​பட்டு திருப்​பணி​கள் தொடங்​கப்​பட்​டன. ரூ.2 கோடியே 44 லட்​சம் மதிப்​பில் ராஜகோபுரத்​தில் 7 தங்​கக்​கலசம், கோவர்த்​த​னாம்​பிகை சந்​நிதி விமானம், வல்லப கணபதி கோயில் விமானம் ஆகிய​வற்றை புதுப்​பிக்​கும் பணி​கள் நடை​பெற்​றன. உபய​தா​ரர்​கள் மூல​மும் பல கோடி ரூபாய் செல​வில் திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. பணி​கள் நிறைவடைந்​ததைத் தொடர்ந்து ஜூலை 14-ம் தேதி கும்​பாபிஷேகம் நடத்த முடி​வெடுக்​கப்​பட்டு அதற்​கான பணி​கள் தொடங்​கின.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow