அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு ‘எம்எஸ்எம்இ நண்பன்’ விருது வழங்கல்!
அமைச்சரின் சிறந்த மேலாண்மை, தொழில் முனைவோர் வளர்ச்சி யில் சிறந்த பங்களிப்பு உள்ளிட்டவைக்காகப் பாராட்டி ஜெர்மனி வாழ் தமிழர்கள் அமைப்பான ‘ஜெர்மன் இந்தியன் பிஸ்னஸ் அலைய ன்ஸ் (ஜிஐபிஏ)’ சார்பில் வழங்கப்பட்டுள்ளது

புதுடெல்லி: தமிழ்நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு ‘எம்எஸ்எம்இ நண்பன்’ விருது வழங்கப்பட்டுள்ளது. இது அமைச்சரின் சிறந்த மேலாண்மை, தொழில் முனைவோர் வளர்ச்சியில் சிறந்த பங்களிப்பு உள்ளிட்டவைக்காகப் பாராட்டி ஜெர்மனி வாழ் தமிழர்கள் அமைப்பான ‘ஜெர்மன் இந்தியன் பிஸ்னஸ் அலையன்ஸ் (ஜிஐபிஏ)’ சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் துறை அமைச்சராக இருப்பவர் தா.மோ.அன்பரசன். இவர், பாரீஸில் நடைபெறும் சர்வதேச ஸ்டாரட் - அப் கருத்தரங்களில் கலந்து கொள்வதற்காக ஐரோப்பிய நாடுகள் பயணத்தில் உள்ளார். இவருடன் ஸ்டார்ட் - அப் தமிழ்நாடு நிறுவனத்தின் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சிவராஜா ராமநாதன், தென்னிந்திய தொழில் வர்த்தக சபை நிர்வாகிகள், சில ஸ்டார் - அப் மற்றும் தொழில் முனைவோர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உடன் பயணிக்கின்றனர்.
What's Your Reaction?