அமெரிக்காவில் இந்திய வம்சாவளி உணவக மேலாளர் கொலை: மனைவி, மகன் கண் முன்னே பயங்கரம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் உள்ள ஓர் உணவகத்தில் மேலாளராக கர்நாடகாவை சேர்ந்த சந்திரமவுலி நாகமல்லையா (50) என்பவர் பணியாற்றி வந்தார்.

டல்லாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் உள்ள ஓர் உணவகத்தில் மேலாளராக கர்நாடகாவை சேர்ந்த சந்திரமவுலி நாகமல்லையா (50) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி நிஷா மற்றும் 18 வயது மகன் கவுரவ் உடன் உணவகத்திலேயே தங்கியிருந்தார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை காலை உணவகத்தின் மற்றொரு ஊழியரான யோர்டானிஸ் கோபோஸ் மார்டினெஸ் (37) ஓர் அறையை சுத்தம் செய்தபோது அங்கு சென்ற நாகமல்லையா பழுதடைந்த வாஷிங் மெஷினை பயன்படுத்த வேண்டாம் என கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மார்டினெஸ் நாகமல்லையாவை கத்தியால் சரமாரியாக தாக்கினார்.
What's Your Reaction?