அமெரிக்காவின் 50% வரி விதிப்பு எதிரொலி: சீனாவுக்கான இறால் ஏற்றுமதி அதிகரிப்பு
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்துள்ளது. இதனால், இந்திய இறால் ஏற்றுமதியாளர்கள் அந்த நாட்டுடன் வர்த்தகம் மேற்கொள்ள இயலாத நிலையில் சீனா கைகொடுத்துள்ளது.

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்துள்ளது. இதனால், இந்திய இறால் ஏற்றுமதியாளர்கள் அந்த நாட்டுடன் வர்த்தகம் மேற்கொள்ள இயலாத நிலையில் சீனா கைகொடுத்துள்ளது.
இதுகுறித்து கிங்ஸ் இன்ஃப்ரா வென்ச்சர்ஸ் லிமிடெட்டின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஷாஜி பேபி ஜான் கூறியதாவது: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ள கூடுதல் வரி அமெரிக்க சந்தையில் இந்தியாவின் போட்டித்தன்மையைக் கடுமையாக குறைத்துள்ளது.
What's Your Reaction?