தேர்தல் பிரச்சாரத்துக்கு லிபியாவிடம் பணம் பெற்ற வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டு சிறை
பிரான்ஸில் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்காக, லிபியாவின் அப்போதைய அதிபர் கடாஃபியிடம் சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில், முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாரீஸ்: பிரான்ஸில் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்காக, லிபியாவின் அப்போதைய அதிபர் கடாஃபியிடம் சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில், முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் சர்கோசி வெற்றி பெற்று அதிபரானார். அப்போது தேர்தல் பிரச்சாரத்துக்காக லிபியாவின் அப்போதைய அதிபர் மாமர் கடாஃபியிடம் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாகவும், இதற்கு பிரதிபலனாக, தனித்துவிடப்பட்ட லிபியாவுக்கு சர்வதேச அரங்கில் பிரான்ஸ் ஆதரவாக செயல்படும் என நிக்கோலஸ் சர்கோசி உறுதி அளித்ததாகவும் தெரியவந்தது.
What's Your Reaction?