அமெரிக்க வரி எதிரொலி: கப்பலில் அனுப்பப்பட்ட 500 டன் கடல் உணவு நடுவழியில் திரும்புகிறது!
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் அந்நாட்டுக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்ட 500 டன் கடல் உணவு நடுவழியில் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்

தூத்துக்குடி: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் அந்நாட்டுக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்ட 500 டன் கடல் உணவு நடுவழியில் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் செல்வின் பிரபு தூத்துக்குடியில் இன்று (ஆக.29) செய்தியாளர்களிடம் கூறியது: “இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்படும். அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.24 ஆயிரம் கோடி கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
What's Your Reaction?