அப்பாவை எவ்வளவு நேசிக்கிறேன்? | தேன் மிட்டாய் 45
கார்டீலியா, புத்திசாலி அல்லவா? நம்மைக் காட்டிலும் கற்பனை வளம் மிக்கவள் அல்லவா? இவளுடைய சொற்களைக் கண்டு மயங்கி நம்மிடம் இருப்பதையும் பிடுங்கி இவளிடமே கொடுத்துவிடுவாரோ அப்பா? நான் அப்பாவை நிமிர்ந்து பார்த் தேன்.

ஒரு நாள் லியர் அரசர் எங்கள் மூவரையும் அழைத்தார். “குழந்தைகளே, எனக்கு வயதாகிவிட்டது. கண்காணாத நிலத்துக்குச் சென்று நிம்மதியாகப் பொழுதைக் கழிக்க விரும்புகிறேன். எனக்கு இருப்பதோ மூன்று மகள்கள். உங்கள் மூவருக்கும் என் ஆட்சியைப் பிரித்துக் கொடுக்க முடிவெடுத்திருக்கிறேன்.
சொல்லுங்கள், நீங்கள் உங்கள் தந்தையை எவ்வளவு நேசிக்கிறீர்கள்? எந்த அளவுக்கு நான் உங்கள் வாழ்வில் முக்கியம் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் நேசிப்பின் அளவைப் பொருத்துதான் நான் அளிக்கப்போகும் செல்வத்தின் அளவும் இருக்கும்.” முதலில் பாய்ந்து வந்தவர் கானரில்.
What's Your Reaction?