அதிவேகமாக ரூ.500 கோடியை வசூலித்த முதல் இந்திய படம்: அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ சாதனை!

அதிவேகமாக ரூ.500 கோடியை வசூலித்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது ‘புஷ்பா 2’. இந்தியில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

Dec 8, 2024 - 15:35
 0  5
அதிவேகமாக ரூ.500 கோடியை வசூலித்த முதல் இந்திய படம்: அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ சாதனை!

ஹைதராபாத்: அதிவேகமாக ரூ.500 கோடியை வசூலித்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது ‘புஷ்பா 2’. இந்தியில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் முதல் நாள் ரூ.294 கோடியை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. இரண்டு நாள்களை சேர்த்து ரூ.449 கோடியை வசூலித்தது. இந்நிலையில் தற்போது ரூ.500 கோடி வசூலை தாண்டியுள்ளது. கிட்டதட்ட 3 நாட்களில் ரூ.500 கோடி வசூலை எட்டியுள்ளது. இதன் மூலம் இந்திய சினிமாவில் அதிகவேகமாக ரூ.500 கோடி வசூலித்து முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது ‘புஷ்பா 2’. இந்தி வெர்ஷனில் மட்டும் ரூ.205 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow