“அதிகாரத்துக்கான தீராத பசி” - கரூர் சம்பவம் குறித்து சந்தோஷ் நாராயணன் வேதனை!

கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வேதனை தெரிவித்துள்ளார்.

Sep 30, 2025 - 22:50
 0  3
“அதிகாரத்துக்கான தீராத பசி” - கரூர் சம்பவம் குறித்து சந்தோஷ் நாராயணன் வேதனை!

சென்னை: கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: “கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட அப்பாவிகளின் உயிரிழப்பு மிகவும் தனிப்பட்ட முறையில் பாதித்துள்ளது. உண்மையிலேயே என் இதயத்தை இது நொறுக்கியுள்ளது. இந்த ஏற்றுக்கொள்ள முடியாத துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அமைதி காண வேண்டும் என நான் மனதார விரும்புகிறேன். இந்த கொடூரமான சம்பவத்தினால் ஏற்பட்ட காயம், கோபம் மற்றும் இயலாமை ஆகியவற்றில் இருந்து என்னை மீட்க எனக்கு சிறிது காலம் தேவைப்பட்டதற்காக வருந்துகிறேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow