‘படையாண்ட மாவீரா’ படத்துக்கு தடை கோரி வீரப்பன் மனைவி வழக்கு!

‘படையாண்ட மாவீரா’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

Sep 19, 2025 - 22:00
 0  3
‘படையாண்ட மாவீரா’ படத்துக்கு தடை கோரி வீரப்பன் மனைவி வழக்கு!

சென்னை: ‘படையாண்ட மாவீரா’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

சந்தனக் கடத்தல் வீரப்பனை அதிரடிப்படை போலீசார் கடந்த 2004-ம் ஆண்டு சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தாக்கல் செய்துள்ள மனுவில், ”படையாண்ட மாவீரா” என்ற படத்தின் போஸ்டர்கள் தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டுளளது. அதில் எனது கணவர் வீரப்பனை போல மீசை வைத்து நபர் உள்ளார். பார்ப்பதற்கு எனது கணவர் புகைப்படத்தையே சித்தரிக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow