அட்சய திருதியை: இன்று நகை கடைகளில் சிறப்பு விற்பனைக்கு ஏற்பாடு - சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்க திட்டம்
சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கவும், காலை 6 மணிக்கே நகைக் கடைகளை திறக்கவும், நகைகளுக்கு லட்சுமி குபேர பூஜை செய்து தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை: அட்சய திருதியை தினமான இன்று நகைக் கடைகளில் சிறப்பு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கவும், காலை 6 மணிக்கே நகைக் கடைகளை திறக்கவும், நகைகளுக்கு லட்சுமி குபேர பூஜை செய்து தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நேற்று இரவு 8.40 மணிக்குத் தொடங்கி, இன்று (30-ம்) மாலை 6.45 மணிவரை நீடிக்கிறது. இதையடுத்து, நகை வியாபாரிகள் இன்று காலையிலேயே அட்சய திருதியை சிறப்பு விற்பனையைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
What's Your Reaction?