மீண்டும் இயக்குநராக களமிறங்கும் சசிகுமார் - ஜனவரியில் படப்பிடிப்பு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சசிகுமார் மீண்டும் இயக்குநராக களமிறங்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டின் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க உள்ளது.

Apr 30, 2025 - 09:10
 0  2
மீண்டும் இயக்குநராக களமிறங்கும் சசிகுமார் - ஜனவரியில் படப்பிடிப்பு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சசிகுமார் மீண்டும் இயக்குநராக களமிறங்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க உள்ளது.

நடிகராகவும் இயக்குநராகவும் சசிகுமார் அறிமுகமான படம், ‘சுப்ரமணியபுரம்’. அவரே தயாரிக்கவும் செய்தார். கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் ஜெய், ஸ்வாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழில் காலம் கடந்தும் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக நிலைத்து விட்டது. இதன்பிறகு 2010-ஆம் ஆண்டு ‘ஈசன்’ என்ற படத்தை சசிகுமார் இயக்கினார். அதன்பிறகு அவர் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டதால் எந்த படமும் இயக்கவில்லை. எனினும் சமூக வலைதளங்களில் பலரும் அவரிடம் படம் எப்போது இயக்குவீர்கள் என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow