அசோக் செல்வனின் புதிய படம் தொடக்கம்
‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுக மானவர்கள் அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம். அதனைத் தொடர்ந்து மீண்டும் புதிய படமொன்றை தயாரிக்க தொடங்கி யிருக்கிறார்கள்

அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர்கள் அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம். அதனைத் தொடர்ந்து மீண்டும் புதிய படமொன்றை தயாரிக்க தொடங்கியிருக்கிறார்கள். இதனை அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘AS 23’ என்று அழைத்து வருகிறார்கள்.
What's Your Reaction?