“என்னை மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார், துன்புறுத்தினார்...” - ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார்

“என் வயிற்றில் வளரும் கருவை கலைக்கச் சொல்லி, நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் என்னை அடித்துத் துன்புறுத்தினார்” என்று ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் தெரிவித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த அந்தப் புகாரில், “என்னை மாதம்பட்டி ரங்கராஜ்  ஏமாற்றிவிட்டார். அவர்தான் என் குழந்தையின் அப்பா” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Aug 29, 2025 - 17:20
 0  3
“என்னை மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார், துன்புறுத்தினார்...” - ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார்

சென்னை: “என் வயிற்றில் வளரும் கருவை கலைக்கச் சொல்லி, நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் என்னை அடித்துத் துன்புறுத்தினார்” என்று ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் தெரிவித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த அந்தப் புகாரில், “என்னை மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார். அவர்தான் என் குழந்தையின் அப்பா” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் நடைபெற்றதாக புகைப்படத்துடன் அறிவித்தார் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா. மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார் ஜாய் கிரிசில்டா. இந்த விவகாரம் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் எந்தவொரு பதிவையும் இதுவரை வெளியிடவில்லை. அவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர். அவருக்கு இரு மகன்கள் உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow