8 கி.மீ. சுற்றளவு ‘நாசம்’ - இஸ்ரேல் மீது ஈரான் வீசும் கிளஸ்டர் குண்டுகளின் வீரியம் என்ன?
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் இன்று 9-வது நாளாக தொடரும் நிலையில், கிளஸ்டர் குண்டுகளை ஈரான் முதல் முறையாக பயன்படுத்துவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

தெஹ்ரான் / டெல் அவிவ்: இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் இன்று 9-வது நாளாக தொடரும் நிலையில், கிளஸ்டர் குண்டுகளை ஈரான் முதல் முறையாக பயன்படுத்துவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இது பல குண்டுகளாக சிதறி வெடிக்கும் வகையை சேர்ந்தது என்பதால் பாதிப்பு அதிகளவில் ஏற்படும் என்பது கவனிக்கத்தக்கது.
அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகள் இடையிலான போர் இன்று 9-வது நாளாக நீடித்தது. இந்த தாக்குதல்களால் இருதரப்பிலும் அதிக அளவில் உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. ஈரானில் ராணுவ உயர் அதிகாரிகள், மூத்த அணு விஞ்ஞானிகள் உட்பட 224 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலில் 25 பேர் உயிரிழந்தனர்.
What's Your Reaction?