28 பந்துகளில் சதம் விளாசி அசத்திய உர்வில் படேலுக்கு சிஎஸ்கே அழைப்பு
5 முறை சாம்பியனான சிஎஸ்கே நடப்பு ஐபிஎல் தொடரில் 8 தோல்விகளை சந்தித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.

சென்னை: 5 முறை சாம்பியனான சிஎஸ்கே நடப்பு ஐபிஎல் தொடரில் 8 தோல்விகளை சந்தித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்நிலையில் அடுத்த சீசனுக்கான அணியை கட்டமைக்கும் பணியில் சிஎஸ்கே இப்போதே கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. ஏற்கெனவே இளம் வீரர்களான மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரே, தென் ஆப்பிரிக்காவின் டெவால்ட் பிரேவிஸ் ஆகியோர் அணிக்குள் கொண்டு வரப்பட்டிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக சையது முஸ்டாக் அலி டி 20 தொடரில் 28 பந்துகளில் சதம் விளாசிய அசத்தியிருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உர்வில் படேல் உள்ளிட்ட 3 இளம் வீரர்களை தேர்வுக்காக சிஎஸ்கே அணி அழைத்து அவர்களது திறனை பரிசோதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
What's Your Reaction?