ரச்சின், வில்லியம்சன் சாதனை சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு 363 ரன்கள் இலக்கு
நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு நியூஸிலாந்து அணி 363 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. நியூஸிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா மற்றும் கேன் வில்லியம்சன் சதம் கடந்து அசத்தினர்.

லாகூர்: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு நியூஸிலாந்து அணி 363 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. நியூஸிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா மற்றும் கேன் வில்லியம்சன் சதம் கடந்து அசத்தினர்.
பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். யங், 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
What's Your Reaction?