தங்களது 2-வது குழந்தையை வரவேற்றுள்ளனர் ரோஹித் - ரித்திகா தம்பதி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரித்திகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தம்பதியின் இரண்டாவது குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Nov 16, 2024 - 10:00
 0  4
தங்களது 2-வது குழந்தையை வரவேற்றுள்ளனர் ரோஹித் - ரித்திகா தம்பதி!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரித்திகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தம்பதியின் இரண்டாவது குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் டிராபி கிரிக்கெட் தொடருக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. தன் மனைவி ரித்திகாவின் பேறு காலம் நெருங்கிய காரணத்தால் ரோஹித் இந்தியாவில் உள்ளார். இந்த நிலையில் அவர்களுக்கு நேற்று (நவ.15) ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து ரோஹித் தரப்பில் இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow