ஐபிஓ வெளியிட தயாராகும் ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த ஆண்டில் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய ஐபிஓ-வாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த ஆண்டில் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய ஐபிஓ-வாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானி 2007-ம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தைத் தொடங்கினார். 2016-ம் ஆண்டு, ஜியோ நாடு முழுவதும் தொலைத்தொடர்பு சேவை வழங்க ஆரம்பித்தது. அறிமுகமான குறுகிய காலத்திலேயே தொலைத்தொடர்பு சந்தையில் ஜியோ முக்கிய இடத்தைப் பிடித்தது.
What's Your Reaction?