ஹொம்பாலே நிறுவனம் தயாரிப்பில் ஹ்ரித்திக் ரோஷன்!
ஹொம்பாலே நிறுவனம் தயாரிக்கும் புதிய படமொன்றில் நாயகனாக ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கவுள்ளார்.

ஹொம்பாலே நிறுவனம் தயாரிக்கும் புதிய படமொன்றில் நாயகனாக ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கவுள்ளார்.
‘கே.ஜி.எஃப்’, ‘கே.ஜி.எஃப் 2’, ‘சலார்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களைத் தயாரித்த நிறுவனம் ஹொம்பாலே பிலிம்ஸ். தற்போது ‘காந்தாரா 2’ படத்தினை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கும் புதிய படத்தினை அந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
What's Your Reaction?