“வெளி மாநிலம் செல்லும் வீராங்கனைகளுக்கு இனி கூடுதல் பாதுகாப்பு” - பஞ்சாப் சம்பவத்துக்கு உதயநிதி விளக்கம்

தமிழக வீராங்கனைகள் அனைவருமே பாதுகாப்பாக உள்ளனர். எனவே, யாரும் அச்சப்பட வேண்டாம். வதந்திகளைப் பரப்ப வேண்டாம். இனிமேல், வெளி மாநிலங்களுக்கு விளையாடச் செல்லும் தமிழக வீராங்கனைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும், என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

Jan 24, 2025 - 19:40
 0  3
“வெளி மாநிலம் செல்லும் வீராங்கனைகளுக்கு இனி கூடுதல் பாதுகாப்பு” - பஞ்சாப் சம்பவத்துக்கு உதயநிதி விளக்கம்

சென்னை: “பஞ்சாப்பில் தமிழக வீராங்கனைகள் அனைவருமே பாதுகாப்பாக உள்ளனர். எனவே, யாரும் அச்சப்பட வேண்டாம். வதந்திகளைப் பரப்ப வேண்டாம். இனிமேல், வெளி மாநிலங்களுக்கு விளையாடச் செல்லும் தமிழக வீராங்கனைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்,” என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று (ஜன.24) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி, பஞ்சாப்பில் உள்ள பதின்டா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் இருந்து 36 வீராங்கனைகள் சென்றுள்ளனர். அவர்களுடன் 3 மேலாளர்கள் மற்றும் 3 பயிற்றுநர்கள் சென்றுள்ளனர். இன்று அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பிஹார் மாநிலம் தர்பாங்கா பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான கபடி போட்டியின்போது, தமிழக வீராங்கனை மீது தாக்குதல் நடந்ததாக புகார் வந்தது. உடனடியாக தொலைபேசியில் அழைத்து பேசினோம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow