விரைவில் ‘ஸ்மார்ட் சிட்டி’ ஆகிறது புதுச்சேரி!

11 இடங்களில் 3.8 மீட்டர் அகலமும், 1.9 மீட்டர் நீளமும் கொண்ட மின்னணு டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் அரசின் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

Mar 10, 2025 - 18:20
 0  3
விரைவில் ‘ஸ்மார்ட் சிட்டி’ ஆகிறது புதுச்சேரி!

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.612 கோடிக்கு புதுச்சேரி நகரில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில், ரூ.99 கோடி 63 லட்சத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

ஒரே இடத்தில் இருந்து பொதுமக்களுக்கு தேவையான பன்முக சேவைகளை வழங்கிடும் வகையில் இத்திட்டம் வரையறுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் போக்குவரத்து சீரமைப்பு, போக்குவரத்து விதிமீறலை கண்காணித்தல், நகரப்பகுதியில் காற்றின் தரத்தை அறிதல், வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை, சுற்றுலா பயணிகளுக்கான பிரத்யேக செயலி, குடிமக்களுக்கான பிரத்யேக செயலி, நகரம் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow