வளர்ந்து கொண்டே வரும் சுயம்பு அய்யனார்!
தேனி அல்லிநகரத்தில் இருந்து 3 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது வீரப்ப அய்யனார் கோயில். மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள இத்திருத்தலத்தில் அய்யனார் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார்.

தேனி அல்லிநகரத்தில் இருந்து 3 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது வீரப்ப அய்யனார் கோயில். மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள இத்திருத்தலத்தில் அய்யனார் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார்.
பொதுவாக, சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் சுவாமிகளுக்கு ஆகாயத் தீர்த்தமே சிறந்தது என்பதால், இங்குள்ள மூலஸ்தானத்தில் கான்கிரீட் மேல்தளம் அமைக்கவில்லை. ஆகாயமே அய்ய னாருக்கு மழைநீரால் அபிஷேகம் செய்துகொண்டு இருக்கிறது. சிவனின் அம்சமாகவே இவர் உள்ளார். அசைவ படையல்கள் இங்கு ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. இருப்பினும், முன்புறம் உள்ள கருப்பசுவாமிக்கு ஆடு,கோழிகள் படையலிடப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது. இங்கு பவுர்ணமி, பிரதோஷம், தைப்பூசம், திருக்கார்த்திகை, மாசிமகம், பங்குனி உத்திரம் காலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். சித்திரை முதல் நாளன்று திருவிழா கொண்டாடப்படுகிறது.
What's Your Reaction?