வங்கதேசத்தில் இஸ்கான் மையத்துக்கு விஷமிகள் தீ வைப்பு; சிலைகள் எரிந்து நாசம்

வங்கதேச நாட்டில் அமைந்துள்ள இஸ்கான் மையம் தீவைத்து எரிக்கப்பட்டது. கோயிலில் இருந்த கடவுள் சிலைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

Dec 8, 2024 - 05:05
 0  3
வங்கதேசத்தில் இஸ்கான் மையத்துக்கு விஷமிகள் தீ வைப்பு; சிலைகள் எரிந்து நாசம்

புதுடெல்லி: வங்கதேச நாட்டில் அமைந்துள்ள இஸ்கான் மையம் தீவைத்து எரிக்கப்பட்டது. கோயிலில் இருந்த கடவுள் சிலைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி, பதவி விலகியதில் இருந்து அங்குள்ள இந்துக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைக் கண்டித்து வங்கதேச சனாதானி விழிப்புணர்வு இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், இந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்த சின்மோய் கிருஷ்ண தாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த நவம்பர் 25-ம் தேதி டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow