வங்கதேசத்தில் இந்து துறவிக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக முன்வராததால் ஜன.2-க்கு வழக்கு ஒத்திவைப்பு

வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால் விசாரணை ஜனவரி 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Dec 3, 2024 - 17:45
 0  4
வங்கதேசத்தில் இந்து துறவிக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக முன்வராததால் ஜன.2-க்கு வழக்கு ஒத்திவைப்பு

டாக்கா: வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் சார்பில் வாதிட வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால் விசாரணை ஜனவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி, பதவி விலகியதில் இருந்து அங்குள்ள இந்துக்களுக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைக் கண்டித்து வங்கதேச சனாதானி விழிப்புணர்வு இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், இந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்த சின்மோய் கிருஷ்ண தாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த நவம்பர் 25ம் தேதி டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். நவம்பர் 26ம் தேதி சட்டோகிராம் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. அவரது வழக்கறிஞர்கள் உடனடியாக மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தனர். ஆனால், அன்றைய தினம் விசாரணை நடைபெறவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow