‘ரூ.25,500 கோடி கடன் பெற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முயற்சி’ - ப்ளூம்பெர்க் அறிக்கை 

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ.25,500 கோடி) கடன் பெறுவதற்கு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ப்ளும்பெர்க் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

Dec 10, 2024 - 17:20
 0  4
‘ரூ.25,500 கோடி கடன் பெற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முயற்சி’ - ப்ளூம்பெர்க் அறிக்கை 

மும்பை: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ( இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.25,500 கோடி) கடன் பெறுவதற்கு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ப்ளும்பெர்க் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்தத் தொகை ரிலையன்ஸ் நிறுவனங்கள் அடுத்த நிதியாண்டின் முதலாம் காலாண்டில் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை திருப்பிச் செலுத்துவதற்காக வாங்கப்படுகிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகப் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தலைமையிலான இந்திய நிறுவனம், அடுத்த ஆண்டின் (2025) முதல் காலாண்டில் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைக்காக பல்வேறு வங்கிகளுடன் கடன் பெறுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடன் பெறுவதற்கான விதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தொடர் பேச்சுவார்த்தைகளில் கொள்கைகளில் மாற்றம் ஏற்படலாம் என்கின்றனர் இதுகுறித்த விவரம் அறிந்தவர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow