ரூ.13,000 கோடி மோசடி செய்த தொழிலதிபர் மெகுல் சோக்சியின் ரூ.2,500 கோடி சொத்து ஏலம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு தலைமறைவான மெகுல் சோக்சியின் ரூ.2,500 கோடி சொத்துகள் ஏலம் விடப்பட உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

Dec 12, 2024 - 03:45
 0  4
ரூ.13,000 கோடி மோசடி செய்த தொழிலதிபர் மெகுல் சோக்சியின் ரூ.2,500 கோடி சொத்து ஏலம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு தலைமறைவான மெகுல் சோக்சியின் ரூ.2,500 கோடி சொத்துகள் ஏலம் விடப்பட உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) ரூ.13,500 கோடி மோசடியில் ஈடுபட்டதாக வைர வியாபாரி மெகுல் சோக்சி, அவரது உறவினர் நீரவ் மோடி உள்ளிட்டோர் மீது மீது புகார் எழுந்தது. இதையடுத்து, மெகுல் சோக்சி தலைமறைவானார். மெகுல் சோக்சி உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அவருக்கு சொந்தமான ரூ.2,565 கோடி மதிப்பிலான பல்வேறு சொத்துகள் முடக்கப்பட்டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow