ரூ.1,110... மதுரையில் பொங்கல் பண்டிகைக்கு முன்பே வாழைத் தார் விலை உயர்வு!

பொங்கல் பண்டிகைக்கு முன்பே மதுரையில் வாழைத்தார்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று ரூ.600க்கு விற்ற ஒரு நாட்டு தார் ஒரே நாளில் விலை உயர்ந்து இன்று ரூ.1,110க்கு விற்பனையானது. 

Jan 11, 2025 - 18:50
 0  2
ரூ.1,110... மதுரையில் பொங்கல் பண்டிகைக்கு முன்பே வாழைத் தார் விலை உயர்வு!

மதுரை: பொங்கல் பண்டிகைக்கு முன்பே மதுரையில் வாழைத்தார்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று ரூ.600க்கு விற்ற ஒரு நாட்டு தார் ஒரே நாளில் விலை உயர்ந்து இன்று ரூ.1,110க்கு விற்பனையானது.

தென் மாவட்டங்களில் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் வாழைத்தார் உற்பத்தி அதிகளவு நடக்கிறது. இந்த மாவட்டங்களில் இருந்து அறுவடை செய்யப்படும் வாழைத்தார்களும், வாழை இலைகளும் கேரளாவுக்கும், தமிழகத்தில் உள்ள பல்வேறு வாழைத்தார் சந்தைகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow