ராகுல் சதம்; பந்த், ஜடேஜா அரை சதம்: முதல் இன்னிங்ஸில் ரன்களை சமன் செய்த இந்தியா - ENG vs IND
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் எடுத்த ரன்களை இந்தியா சமன் செய்தது. கே.எல்.ராகுல் சதம் விளாசினார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104, பிரைடன் கார்ஸ் 56, ஜேமி ஸ்மித் 51 ரன்கள் சேர்த்தனர்.
What's Your Reaction?