ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி வீரர் ரஞ்சன் பால் இரட்டை சதம்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் நாகாலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் அபாரமாக விளையாடி இரட்டைச் சதம் விளாசினார்.

திமாப்பூர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் நாகாலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் அபாரமாக விளையாடி இரட்டைச் சதம் விளாசினார்.
‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக, நாகாலாந்து அணிகள் மோதிய லீக் ஆட்டம் நேற்று முன்தினம் திமாப்பூரிலுள்ள நாகாலாந்து கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. முதலில் விளையாடிய தமிழக அணி முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 2 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்திருந்தது. விமல் குமார் 189 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
What's Your Reaction?