மொராக்கோவில் இந்திய தனியார் நிறுவன ராணுவ கவச வாகன உற்பத்தி ஆலை: ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இந்திய தனியார் துறை சார்பில் முதல் ராணுவ கவச வாகன உற்பத்தி ஆலையை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார்.

புதுடெல்லி: வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இந்திய தனியார் துறை சார்பில் முதல் ராணுவ கவச வாகன உற்பத்தி ஆலையை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். இதற்கான விழாவில், மொராக்கோ பாதுகாப்பு அமைச்சர் அப்தெலதீப் லவுடி உடன் பங்கேற்றார்.
டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் டிஆர்டிஓ உடன் இணைந்து மொராக்கோவில் உள்ள காசாபிளாங்காவுக்கு அருகே ராணுவ கவச வாகனங்களுக்கான (டபிள்யூஎச்ஏபி 8x8) நவீன பாதுகாப்பு உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது.
What's Your Reaction?