சென்செக்ஸ் விரைவில் 94,000 புள்ளிகளை தொடும்: எச்எஸ்பிசி ஆய்வில் தகவல்
கடந்த ஓராண்டாக பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்து வரும் நிலையில் சென்செக்ஸ் விரைவில் 94,000 புள்ளிகளை தொடும் என்று எச்எஸ்பிசி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி: கடந்த ஓராண்டாக பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்து வரும் நிலையில் சென்செக்ஸ் விரைவில் 94,000 புள்ளிகளை தொடும் என்று எச்எஸ்பிசி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எச்எஸ்பிசி ஆய்வாளர் ஹெரால்டு வான் டெர் லிண்டே கூறியதாவது: கடந்த 2024 செப்டம்பரிலிருந்து இந்திய பங்குச் சந்தைகள் மிகப்பெரிய அளவில் பலவீனமான நிலையில் இருந்து வருகிறது. உலக சந்தைகளுடன் ஒப்பிடுகையில் இந்திய சந்தையின் செயல்பாடு மோசமாக உள்ளது. ஆனால், இந்த நிலை நீண்ட நாள் நீடிக்காது என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
What's Your Reaction?