“முத்ரா திட்டத்தின் கீழ் 52 கோடி கடன்களை வழங்கியது ஈடில்லா சாதனை!” - பிரதமர் மோடி பெருமிதம்
முத்ரா திட்டத்தின் கீழ் 52 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் இது உலக அளவில் இணையற்ற மிகப்பெரிய சாதனை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: முத்ரா திட்டத்தின் கீழ் 52 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் இது உலக அளவில் இணையற்ற மிகப்பெரிய சாதனை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
முத்ரா திட்டத்தின் 10 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்றது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த இத்திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிகாரமளிப்பதிலும், நாடு முழுவதும் தொழில்முனைவை ஊக்குவிப்பதிலும் முத்ரா திட்டம் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கி உள்ளது. விளிம்புநிலை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த தனிநபர்களுக்கு இந்தத் திட்டம் நிதி ஆதரவை வழங்கியுள்ளது. உத்தரவாதங்கள் அல்லது விரிவான ஆவணங்கள் தேவைப்படாமல் தங்கள் சொந்தத் தொழில்களைத் தொடங்க இது அவர்களுக்கு உதவுகிறது.
What's Your Reaction?