முதல் முறை வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 வரை ஊக்கத் தொகை - மத்திய தொழிலாளர் ஆணையர் விளக்கம்
பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் முதல்முறை வேலைக்கு செல்பவர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக சென்னை ஐசிஎஃபில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய தொழிலாளர் ஆணையர் ஸ்ரீநுதாரா விளக்கமளித்தார்.

சென்னை: பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் முதல் முறை வேலைக்கு செல்பவர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படுவதாக மத்திய தொழிலாளர் ஆணையர் ஸ்ரீநுதாரா விளக்கமளித்தார்.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக வேலைவாய்ப்புடன் இணைந்து ஊக்கத் தொகை வழங்கும் வகையில் பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான வேலைவாய்ப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் அலுவலகம் சார்பில் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் இன்று நடைபெற்றது.
What's Your Reaction?