போராட்டத்தை ஒடுக்க துப்பாக்கிச் சூடு: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 12 பேர் உயிரிழப்பு

பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​தி​ மக்கள் 38 முக்​கிய கோரிக்​கைகளை வலி​யுறுத்தி போராட்​டம் நடத்தி  வருகின்றனர். 

Oct 3, 2025 - 08:35
 0  3
போராட்டத்தை ஒடுக்க துப்பாக்கிச் சூடு: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 12 பேர் உயிரிழப்பு

முசாபராபாத்: பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​தி​ மக்கள் 38 முக்​கிய கோரிக்​கைகளை வலி​யுறுத்தி போராட்​டம் நடத்தி
வருகின்றனர்.

இதற்கு ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கை குழு (ஏஏசி) தலைமை தாங்​கியது. போராட்டத்தின் 3-வது நாளான நேற்று பேரணி நடத்த திட்டமிட்டனர். இதையடுத்து, முசாபராபாத், தத்யா,ரவாலாகோட், நீலம் பள்ளத்தாக்கு மற்றும் கோட்லி பகுதிகளில் ராணுவம் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டனர். பேரணியைத் தடுக்க போலீஸார் ஏற்படுத்திய தடைகளை தாண்டி மக்கள் பேரணி சென்றனர். அப்போது அவர்கள், ‘‘காஷ்மீர் எங்களுடையது, அதன் விதியை நாங்கள்தான் நிர்ணயிப்போம். ’’ என கோஷமிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow