‘பைசன் காளமாடன்’ விமர்சனம்: மாரி செல்வராஜின் மற்றொரு அழுத்தமான படைப்பு!
’பரியேறும் பெருமாள்’ தொடங்கி ‘வாழை’ வரை சமூக மாற்றத்துக்கு தேவையான அரசியலை ஜனரஞ்சக அம்சங்களுடன் கொடுத்து வரும் மாரி செல்வராஜ், தூத்துக்குடியில் பிறந்து இந்திய அளவில் கபடியில் சாதித்த மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியுள்ள படம்தான் ‘பைசன் காளமாடன்’.

’பரியேறும் பெருமாள்’ தொடங்கி ‘வாழை’ வரை சமூக மாற்றத்துக்கு தேவையான அரசியலை ஜனரஞ்சக அம்சங்களுடன் கொடுத்து வரும் மாரி செல்வராஜ், தூத்துக்குடியில் பிறந்து இந்திய அளவில் கபடியில் சாதித்த மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியுள்ள படம்தான் ‘பைசன் காளமாடன்’.
எந்நேரமும் வெடித்துச் சிதற காத்திருக்கும் சாதி மோதல்கள் நிறைந்த வனத்தி என்ற கிராமத்தைச் சேர்ந்த கிட்டானுக்கு (துருவ் விக்ரம்) சிறுவயதில் இருந்தே கபடியில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் கபடியில் ஆர்வம் காட்டிய பலரும் வன்முறையில் இறங்கிவிட்டதால் தன் மகனும் அப்படி ஆகிவிடக்கூடாது என்று அஞ்சுகிறார் கிட்டானின் தந்தை வேலுசாமி (பசுபதி).
What's Your Reaction?