பேரிடரில் துணை நின்றவர்களின் போராட்டம்
சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகைக்கு வெளியே 100 மீட்டர் தொலைவுக்குப் பந்தல் அமைக்கப்பட்டு, தேசியக்கொடியுடன் பெண்கள் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். ரிப்பன் மாளிகையில் தொடங்கி, புதுப்பிக்கப்பட்டுவரும் விக்டோரியா ஹால் வரை, ‘வேலையை நிரந்தரம் செய்க’ என்கிற கோரிக்கைக் குரல்கள் பலமாக ஒலித்தன.

சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகைக்கு வெளியே 100 மீட்டர் தொலைவுக்குப் பந்தல் அமைக்கப்பட்டு, தேசியக்கொடியுடன் பெண்கள் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். ரிப்பன் மாளிகையில் தொடங்கி, புதுப்பிக்கப்பட்டுவரும் விக்டோரியா ஹால் வரை, ‘வேலையை நிரந்தரம் செய்க’ என்கிற கோரிக்கைக் குரல்கள் பலமாக ஒலித்தன.
தனியாரிடம் வேலையை ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை அரசு நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் ஒரு வாரத்துக்கு மேலாகப் பெண் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
What's Your Reaction?