‘புஷ்பா 2’ குறித்த சர்ச்சை கருத்துக்கு சித்தார்த் விளக்கம்

‘புஷ்பா 2’ குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு சித்தார்த் விளக்கம் அளித்துள்ளார்.

Dec 12, 2024 - 17:00
 0  6
‘புஷ்பா 2’ குறித்த சர்ச்சை கருத்துக்கு சித்தார்த் விளக்கம்

‘புஷ்பா 2’ குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு சித்தார்த் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் ‘புஷ்பா 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு கூடிய கூட்டம் குறித்து சித்தார்த்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “நமது ஊரில் கட்டிட வேலைகளுக்காக ஜேசிபியை நிறுத்தினாலும்கூட கூட்டம் கூடும். எனவே பிஹாரில் கூட்டம் கூடியது அவ்வளவு பெரிய விஷயம் அல்ல. பெரிய மைதானம் வைத்து நிகழ்ச்சி நடத்தினால் கூட்டம் கூடத்தான் செய்யும். இந்தியாவில் கூட்டம் கூடுவதற்கும், குவாலிட்டிக்கும் சம்பந்தமில்லை” என நடிகர் சித்தார்த் தெரிவித்தார்.

இந்தக் கருத்து இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இணையவாசிகள் பலரும் அவருடைய கருத்துக்கு அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். இதனிடையே ‘மிஸ் யூ’ படத்தின் பத்திரிகையாளர் காட்சிக்கு சித்தார்த் வந்திருந்தார். அவரிடம் அவரது கருத்து குறித்தும், அவருக்கும் அல்லு அர்ஜுனுக்கும் பிரச்சினையா என்றும் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow