புதுச்சேரியில் இனி தொழில் தொடங்க கால வரம்புக்குள் தடையில்லா ஆணை வழங்காவிட்டால் அபராதம்!
புதுச்சேரியில் தொழில்கள் தொடங்க காலவரம்புக்குள் தடையில்லா ஆணையை அரசுத் துறைகள் வழங்காவிட்டால் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி: புதுச்சேரியில் தொழில்கள் தொடங்க கால வரம்புக்குள் தடையில்லா ஆணையை அரசுத் துறைகள் வழங்காவிட்டால் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
யூனியன் பிரதேசமான புதுவையில் தொழிற்சாலைகளுக்கு மத்திய அரசின் சலுகைகள் கடந்த காலத்தில் அதிகமாக இருந்தது. இதனால் புதுவையில் அதிகளவில் தொழில்களைத் தொடங்கினர். இந்த சலுகைகளை மத்திய அரசு படிப்படியாக நிறுத்தியது. இதனால் புதிதாகப் புதுவையில் தொழில் தொடங்க யாரும் முன்வரவில்லை.
What's Your Reaction?