புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார்

மலையாள எழுத்தாளரும், சினிமா இயக்குநருமான எம்.டி.வாசுதேவன் நாயர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 91.

Dec 26, 2024 - 00:05
 0  4
புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார்

கோழிக்கோடு: மலையாள எழுத்தாளரும், சினிமா இயக்குநருமான எம்.டி.வாசுதேவன் நாயர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 91.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கடும் நெஞ்சு வலி காரணமாக கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாசுதேவன் நாயருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, எனினும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்துவந்த நிலையில், புதன்கிழமை (டிச.25) வாசுதேவன் நாயர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow