பிரபல போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் இந்தியா
2025-ம் ஆண்டுக்கான மெகா கோடீஸ்வரர்கள் (பில்லியனர்கள்) பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில், 902 பில்லியனர்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 200 பில்லியனர்களுடன் இந்தியா 3-வது இடத்திலும் உள்ளன.

வாஷிங்டன்: 2025-ம் ஆண்டுக்கான மெகா கோடீஸ்வரர்கள் (பில்லியனர்கள்) பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில், 902 பில்லியனர்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 200 பில்லியனர்களுடன் இந்தியா 3-வது இடத்திலும் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் உலக கோடீஸ்வர்களின் பட்டியலை அவர்களது சொத்து மதிப்பின் அடிப்படையில் ஆய்வு செய்து போர்ப்ஸ் இதழ் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவில் கடந்தாண்டில் 813-ஆக இருந்த பில்லியனர்கள் எண்ணிக்கை நடப்பாண்டில் 902-ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம், மெகா கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. எலான் மஸ்க் (342 பில்லியன் டாலர்), மார்க் ஸுகர்பெர்க் (216 பில்லியன் டாலர்), ஜெப் பெசோஸ் (215 பில்லியன் டாலர்) ஆகியோர் இந்த பட்டியலில் முன்னிலையில் உள்ளனர்.
What's Your Reaction?