அரசு சேவை பெற லஞ்சம் 66% நிறுவனங்கள் குற்றச்சாட்டு: ஆய்வறிக்கையில் தகவல்

இந்தியாவில் 66 சதவீத வணிக நிறுவனங்கள், அரசின் சேவைகளை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவது லோக்கல்சர்க்கிள்ஸ் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Dec 9, 2024 - 06:20
 0  4
அரசு சேவை பெற லஞ்சம் 66% நிறுவனங்கள் குற்றச்சாட்டு: ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் 66 சதவீத வணிக நிறுவனங்கள், அரசின் சேவைகளை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவது லோக்கல்சர்க்கிள்ஸ் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. சிசிடிவி கேமரா உள்ளிட்ட கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும் ஊழல் நடவடிக்கை கட்டுப்படுத்தப்படவில்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நாடு தழுவிய அளவில் 159 மாவட்டங்களில் உள்ள வணிக நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 66 சதவீத வணிகங்கள் லஞ்சம் கொடுத்த பிறகே அரசின் சேவைகளை பெற முடிவதாக கவலை தெரிவித்துள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow