பிசிபி தலைவரிடமிருந்து கோப்பையை பெற மறுத்த இந்தியா: வெறும் கையுடன் கொண்டாட்டம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரிடமிருந்து ஆசிய கோப்பையை இந்திய அணி பெற மறுத்து மேடையில் வெறும் கையுடன் வெற்றியை கொண்டாடியது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரிடமிருந்து ஆசிய கோப்பையை இந்திய அணி பெற மறுத்துள்ளது.
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் 9வது முறையாக ஆசிய கோப்பை இந்தியா கைப்பற்றியுள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 147 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.5 ஓவர்களில் இலக்கை தாண்டி 150 ரன்கள் அடித்து வெற்றியை சாத்தியமாக்கியது.
What's Your Reaction?