பி.எப். பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கலாம்: தீபாவளிக்கு முன்பு பயனாளர்களுக்கு பரிசு
வங்கிகளை போலவே பி.எப்.பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதியை தீபாவளிக்கு முன்பு அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி: வங்கிகளை போலவே பி.எப்.பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதியை தீபாவளிக்கு முன்பு அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) அமைப்பு, ஊழியர்களுக்கு பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, வரும் தீபாவளிக்கு முன்பாக, ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா,உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
What's Your Reaction?