பி.எப். பணத்தை 100 சதவீதம் எடுக்கலாம்: விதிகளை எளிதாக்கியது மத்திய அரசு

தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி​யில் உள்ள பணத்​தை, அத்​தி​யா​வசிய தேவை​களுக்கு 100 சதவீதம் எடுக்​கும் வகை​யில் விதி​முறை​களை எளி​தாக்கி உள்​ளது மத்​திய அரசு.

Oct 15, 2025 - 10:00
 0  3
பி.எப். பணத்தை 100 சதவீதம் எடுக்கலாம்: விதிகளை எளிதாக்கியது மத்திய அரசு

புதுடெல்லி: தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி​யில் உள்ள பணத்​தை, அத்​தி​யா​வசிய தேவை​களுக்கு 100 சதவீதம் எடுக்​கும் வகை​யில் விதி​முறை​களை எளி​தாக்கி உள்​ளது மத்​திய அரசு. தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) அமைப்​பின் 238-வது மத்​திய அறங்​காவலர்​கள் குழு கூட்​டம் மத்​திய தொழிலா​ளர் துறை அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வியா தலை​மை​யில் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் பிஎப் பணத்தை திரும்பப் பெறு​வதற்​கான விதி​முறை​களை எளி​தாக்க ஒப்​புதல் வழங்​கப்​பட்​டது. அதன்​படி, மருத்​துவம், கல்​வி, திரு​மணம், வீடு மற்​றும் சிறப்பு சூழ்​நிலைகள் என அத்​தி​யா​வசிய தேவை​களுக்கு இனிமேல் தொழிலா​ளர்​கள் தங்​கள் பிஎப் பணத்​தில் 100 சதவீதத்​தை​யும் திரும்ப பெறலாம். இது 7 கோடிக்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் தங்​கள் ஓய்​வூ​தி​யத்​தைப் பாது​காப்​ப​தோடு, தங்​கள் சேமிப்பை எளி​தாக அணுக​வும் முடி​யும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow