பாகிஸ்தான் ரயில் கடத்தல்: தீவிரவாதிகள் பிடியில் 182 பிணைக் கைதிகள் - நிலவரம் என்ன?

பாகிஸ்தான் நாட்டில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ரயிலை மறித்த தீவிரவாதிகள், துப்பாக்கிசூடு நடத்திய நிலையில் சுமார் 182 பேரை பிணைக்கைதிகளாக வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Mar 11, 2025 - 21:35
 0  7
பாகிஸ்தான் ரயில் கடத்தல்: தீவிரவாதிகள் பிடியில் 182 பிணைக் கைதிகள் - நிலவரம் என்ன?

புதுடெல்லி: பாகிஸ்தான் நாட்டில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ரயிலை மறித்த தீவிரவாதிகள், துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், சுமார் 182 பேரை பிணைக் கைதிகளாக வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அந்த நாட்டு பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் 20 பேரை தீவிரவாதிகள் கொன்றுள்ளனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் க்வெட்டாவில் இருந்து 400-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவர் நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை தீவிரவாதிகள் செவ்வாய்கிழமை கடத்தினர். இதற்கு பலூச் விடுதலை ராணுவம் (Baloch Liberation Army-BLA) எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow