அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் தகுதியானவர்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகுதியானவர் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Jul 8, 2025 - 16:00
 0  4
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் தகுதியானவர்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகுதியானவர் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள பெஞ்சமின் நெதன்யாகு, நேற்றிரவு (திங்கள்கிழமை) டொனால்டு ட்ரம்ப்பின் இரவு விருந்தில் பங்கேற்றார். முன்னதாக, ட்ரம்ப்பிடம் நெதன்யாகு ஒரு கடிதம் வழங்கினார். அப்போது பேசிய அவர், "அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒன்றன் பின் ஒன்றாக நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் அமைதியை ஏற்படுத்துகிறார். எனவே, நோபல் பரிசு கமிட்டிக்கு அனுப்பிய பரிந்துரை கடிதத்தை நான் தற்போது தங்களுக்கு வழங்குகிறேன். அமைதிக்கான நோபல் பரிசு பெற நீங்கள் தகுதியானவர். நீங்கள் அதைப் பெற வேண்டும்" என கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow