பழம்பெரும் நடிகை கிருஷ்ணவேணி காலமானார்
பழம்பெரும் நடிகையும் தயாரிப்பாளருமான கிருஷ்ணவேணி, ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 103.

பழம்பெரும் நடிகையும் தயாரிப்பாளருமான கிருஷ்ணவேணி, ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 103.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கிய கிருஷ்ணவேணி, தெலுங்கு, தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில், புதுமைப்பித்தன் கதை, வசனம் எழுதி 1948-ம் ஆண்டு வெளியான ‘காமவல்லி’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். 1939-ம் ஆண்டு மிர்சாபுரம் ஜமீன், மேகா வெங்கட்ராமையா அப்பா ராவ் பகதூரை திருமணம் செய்துகொண்டார்.
What's Your Reaction?