பழநியில் தைப்பூசத் தேரோட்டம் கோலாகலம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்!

பழநி தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று செவ்வாய்கிழமை (பிப்.11) மாலை கோலாகலமாக நடைபெற்றது.

Feb 11, 2025 - 20:55
 0  2
பழநியில் தைப்பூசத் தேரோட்டம் கோலாகலம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்!

பழநி: பழநி தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று செவ்வாய்கிழமை (பிப்.11) மாலை கோலாகலமாக நடைபெற்றது. ‘அரோகரா’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா பிப்.5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தந்தப் பல்லக்கு, தங்க மயில் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow